உள்ளூர் செய்திகள் (District)

வேலூரில் ரத்ததான முகாம் நடந்த காட்சி.

வேலூரில் ரத்ததான முகாம்

Published On 2022-10-16 09:00 GMT   |   Update On 2022-10-16 09:00 GMT
  • போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழகத்தின் 30 -ம் ஆண்டு விழா, போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு விழா, செய்தோருக்கு பாராட்டு விழா வேலூர் பில்டர் பெட்ரோடு அனிகர் ஆஸ்ரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது.

விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் திலிபன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் நாராயணன் வரவேற்று பேசினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் வேலூர் கார்த்திகேயன் எம். எல். ஏ, மேயர் சுஜாதா, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள்பாஸ்கரன், மேனாள், வரவேற்புக்குழு செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News