உள்ளூர் செய்திகள்

காளைகள் முட்டி 3 பேருக்கு எலும்பு முறிவு

Published On 2023-02-05 08:59 GMT   |   Update On 2023-02-05 08:59 GMT
  • அணைக்கட்டு கொட்டாவூரில் எருது விடும் விழா நடந்தது
  • மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

சுமார் 300 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.

திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, போன்ற பல்வேறு மாவட்டங்களில், இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டன.

வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த விழாவை காண ஒடுகத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில், குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளைக்கு மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், மாடு விடும் திருவிழாவில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 3 பேர் கை, கால் முறிவு ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காகவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News