உள்ளூர் செய்திகள்
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
- சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடவடிக்கை
- மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை நடை சாத்தப்படுகிறது
வேலூர்:
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் தினமும் பக்தர்களின் தரிச னத்திற்காக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி தினத்தன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்கக்கோவில், சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் நாராயணி கோவில் தரிசன நேரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். மீண்டும் 9-ந் தேதி காலை 8 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காககோவில் நடை திறக்கப்படும்.