உள்ளூர் செய்திகள் (District)

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கையில் காலி தட்டு ஏந்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

கையில் காலிதட்டு ஏந்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-14 10:34 GMT   |   Update On 2022-10-14 10:34 GMT
  • பென்ஷன் வழங்க கோரி நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்

மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் முருகன் வரவேற்று பேசினார்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் சுசிலா சிறப்புரையாற்றினார். சட்டபூர்வ பென்ஷன் ரூ.7,850 வழங்க வேண்டும் 3 சதவீதம் வழங்க வேண்டும்.

குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி, ரமாபாய், விஜயலட்சுமி, கமலா ருக்மணி, உமா மகேஸ்வரி, ரம்யா மேனகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News