உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

வேலூரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

Published On 2023-10-30 09:38 GMT   |   Update On 2023-10-30 09:38 GMT
  • எல்லை பாதுகாப்பு படை வீரர் சாலை விபத்தில் பலி
  • உடல் அடக்கம் செய்யப்பட்டது

வேலூர்:

வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 41). இவர் கர்நாடகாவில் உள்ள எஸ்.டி.சி பட்டாலியனில் எல்லை பாதுகாப்பு படை வீரராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சாலை விபத்தில் இறந்தார்.

இதையடுத்து சுதாகர் உடல் நேற்று அலமேலு மங்காபுரம் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மயானத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் முழுங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து சுதாகர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News