பிளஸ்-1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு
- வருகிற 20-ந் தேதி கடைசி நாள்
வேலூர்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பி யாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்குபெறுகின்றனர்.
அதேபோல் தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தி க்கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வி த்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்க ளுக்கு வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்க ளிலும் மாவட்ட தலைந கரங்களில் இந்த தேர்வு நடக்கும். அதன்படி இந்த ஆண்டு தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அரசு பள்ளி, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி. உள்பட பிளஸ்-1 வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, வருகிற 20-ந் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.