புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு
- பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது
- எம்.எல்.ஏ., தாசில்தார் இடத்தை பார்வையிட்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.
சில வருடங்களுக்கு முன்பு புதிதாக தாலுகா அலுவலகம் கட்டிடங்கள் கட்டப்பட்டது. அப்போது அங்கிருந்து சார் பதிவாளர் அலுவலகம் இடிக்கப்பட்டது.
தற்போது வாடகை கட்டிடத்தில் தங்கம் நகர் பகுதியில் இயங்கி வருகிறது.
குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் புதியதாக கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குடியாத்தம் அடுத்த கள்ளூரில் அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு இடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வுப்பணிகள் நேற்று நடைபெற்றது.
இதனை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தாசில்தார் எஸ்.விஜயகுமார் ஆகியோர் இடத்தை பார்வையிட்டனர்.
துணை தாசில்தார் சுபிச்சந்தர், அரசு மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் தீபிகாபரத், கிராம நிர்வாக அலுவலர் உஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.