உள்ளூர் செய்திகள்

சத்துவாச்சாரி, சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-07-19 09:06 GMT   |   Update On 2023-07-19 09:06 GMT
  • காலை 9 மணி முதல், மதியம் 2 மணி தடை
  • பராமரிப்பு பணிகள் நடக்கிறது

வேலூர்:

வேலுர் மின் பகிர்மான வட்டம், சத்துவாச்சாரி, சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு மற்றும் தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி சத்துவாச்சாரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சத்துவாச்சாரி பேஸ் 1, 2, 3, 4, 5, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாபேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதபட்டரை, இ.பி. நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

சாத்துமதுரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாத்துமதுரை, சாத்துப்பாளையம், நெல்வாய், குளவிமேடு, நாயக்கனேரி, துத்திப்பட்டு, அடுக்கம்பாறை, ஆற்காட்டான்குடிசை, மூஞ்சூர்பட்டு, நாகநதி, துத்திக்காடு, பங்களத்தான், பாலாத்துவண்ணான், கனிகனியான், சோழவரம், புதூர், கணியம்பாடி, பாலம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

அதேபோல் கீழ்ப்பள்ளிப்பட்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்ப்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், கொங்கராம்பட்டு, கீழ்அரசம்பட்டு, காட்டுக்கானூர், ரெட்டிபாளையம், மேட்டுகுடிசை, அமிர்தி, நீப்பலாம்பட்டு, சாத்தம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், மேல்வல்லம், மோத்தக்கல், மோட்டுபாளையம் கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், சலமநத்தம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், தொரப்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தொரப்பாடி, அல்லாபுரம், சின்ன அல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News