உள்ளூர் செய்திகள் (District)
மீன்வளத் துறை ஆணையருடன் விஜய் வசந்த் சந்திப்பு
- குமரி மாவட்ட மீனவர்களின் பல்வேறு தேவைகளை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
- தேங்காய்பட்டணம் துறைமுக பணிகளை விரைவாக முடிப்பது குறித்து ஆலோசனை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தொகுதியின் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வருகிறார்.
அவ்வகையில், தமிழக மீன்வள துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து குமரி மாவட்ட மீனவர்களின் பல்வேறு தேவைகளை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக தேங்காய்பட்டணம் துறைமுக பணிகளை விரைவாக முடிப்பது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறுசீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக துவங்க வேண்டும் என கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.