உள்ளூர் செய்திகள்

சுதந்திரமாக வாழ வழி வகுப்போம்... விஜய் வசந்த் எம்.பி. மகளிர் தின வாழ்த்து

Published On 2023-03-07 14:58 GMT   |   Update On 2023-03-07 14:58 GMT
  • தடைக் கற்களை உடைத்து பாதை அமைத்து கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை.
  • பெண்களுக்கு கல்வி எனும் அடிப்படை உரிமையை கொடுப்பதில் நாம் உறுதி கொள்வோம்.

கன்னியாகுமரி:

மகளிர் தினத்தையொட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

சமூகத்தின் கண்களாக விளங்கி, நாட்டின் தூண்களாக தாங்கி, வீட்டின் விளக்காக ஒளி தரும் பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

பள்ளி கூடங்களில், கல்லூரிகளில், அலுவலகங்களில் மட்டுமின்றி இன்று நாட்டின் மிக முக்கிய பொறுப்புகளில் பெண்கள் சிறந்து விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நமது நாட்டின் எல்லா துறைகளிலும் நமது கொடியை உச்சத்தில் பறக்க விட பெண்கள் முன் நிற்கிறார்கள் என்றால் மிகையாகாது. இதற்காக அவர்கள் செய்கின்ற தியாகங்களும், நேரிடும் இன்னல்களும் எண்ணற்றவை. அவற்றை எல்லாம் கடந்து பெண்கள் சமூகத்தில் மிளிர்கிறார்கள் என்றால் அதுவே பெண் சக்தி.

பெண்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் தடைக் கற்களை உடைத்து அவர்களுக்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தட்டிக்கேட்டு அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமையாக கருதுவோம். பெண்களுக்கு கல்வி எனும் அடிப்படை உரிமையை கொடுப்பதில் நாம் உறுதி கொள்வோம். மகளிருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்கள் சுதந்திரமாக வாழ வழி வகுப்போம்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

இவ்வாறு விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News