உள்ளூர் செய்திகள் (District)

மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள்.

கிராமமக்கள் சாலை மறியல்

Published On 2022-11-16 09:47 GMT   |   Update On 2022-11-16 09:47 GMT
  • வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.
  • சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் கனமழையால் வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகள் யாரும் பார்க்க வரவில்லை, நிவாரணமும் வழங்கவில்லை.

இதனால் வாழ்வாதாரம் இழந்து சமைப்பதற்கு கூட பொருட்கள் இல்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமபடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியல் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News