உள்ளூர் செய்திகள்

இளம்பெண்-கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-02-06 08:11 GMT   |   Update On 2023-02-06 08:11 GMT
  • 2 மகன்களுடன் இளம்பெண்-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
  • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அல்லம் பட்டியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகள் முத்துமாரி (33). இவருக்கும், ஓடைப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தீனதயாளன் (5), தங்கப்பாண்டி (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முத்துமாரி தனது மகன்களுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக முத்துமாரி உறவினர் மாரியப்பன் என்பவருடன் அடிக்கடி போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துமாரி தனது 2 மகன்களுடன் மாயமானார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

சிவகாசி சாட்சியாபு ரத்தை சேர்ந்தவர் பென்னி. இவரது மகள் பிருந்தா பிளஸ்சி(வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News