உள்ளூர் செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

Published On 2023-06-08 08:10 GMT   |   Update On 2023-06-08 08:10 GMT
  • வாலிபரை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி யாதவர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 35). இவர் அங்குள்ள கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அேத பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விசிலடித்து அங்கிருந்தவர்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை முத்துராஜா தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அங்கி ருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த முத்துராஜா சிறிது நேரம் கழித்து மீண்டும் கலை நிகழ்ச்சி களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வெங்க டேஷ் மற்றும் அவரது உறவினர்க ளான ராகவன், ரமேஷ், முத்து, முத்து சரவணன், லட்சுமி உள்ளிட்ட 11 பேர் அவரை வழி மறித்து தகராறு செய்த னர். மேலும் அவரை தாக்கினர். இதை தடுக்க வந்த முத்துராஜாவின் தந்ைத முத்தையா, ராமகிருஷ்ணன், ஆதிமுகிலா ஆகியோருக்கும் அடி-உதை விழுந்தது. இதில் காயம் அடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுகுறித்து முத்துராஜா கூமாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News