உள்ளூர் செய்திகள்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது.
- இந்த திட்டத்தின் மூலம் 98 மாணவர்கள் பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் நிறும செயலரியல் துறை சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த மாணவர் விளக்க காட்சியை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாணவர்களின் பகுப்பாய்வுத் திறனை தூண்டுவதாகும். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மத்திய பட்ஜெட் சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் நாட்டின் விரைவான மற்றும் சீரான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ளது என்றார்.
துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வாழ்த்தி பேசினார். மத்திய பட்ஜெட் குறித்து 22 மாணவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். உதவிப் பேராசிரியை விண்ணரசி ரெக்ஸ் வரவேற்றார்.
உதவிப் பேராசிரியை சூரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் ஜேஸ்மின் பாஸ்டினா செய்தி ருந்தார். இந்த திட்டத்தின் மூலம் 98 மாணவர்கள் பயனடைந்தனர்.