உள்ளூர் செய்திகள் (District)

கல்லூரி விழா நடந்தது

நுண்கலை நாள் விழா

Published On 2023-01-17 09:26 GMT   |   Update On 2023-01-17 09:26 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நுண்கலை நாள் விழா நடந்தது.
  • துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

சிவகாசி,

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நுண்கலை நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இதில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முகத்தில் வர்ணம் பூசுதல், சைகை மொழி, வினாடி-வினா, கழிவில் இருந்து கலை, நா பிறழ் பயிற்சி, குறள் முழக்கம், 3டி ஓவியம், விளம்பரம் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பிரதீபா வரவேற்றார். துணைத் தலைவர் கமலவேணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் செய்தி ருந்தனர். 

Tags:    

Similar News