உள்ளூர் செய்திகள்

விழாவில் ஒரு மாணவிக்கு தனியார் நிறுவன தலைவர் பாரிராஜன் பரிசு வழங்கினார்.

நிறுவனர் தின கொண்டாட்டம்

Published On 2023-05-13 07:54 GMT   |   Update On 2023-05-13 07:54 GMT
  • சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் நிறுவனர் தினம் கொண்டாட்டப்பட்டது.
  • உதவி பேராசிரியை செண்பகலட்சுமி நன்றி கூறினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் ஏ.பி.செல்வராஜன் முன்னிலை வகித்தார். முனைவர் சந்திராபோஸ் வரவேற்றார்.

முதல்வர் வளர்மதி பேசினார்.

சிவகாசி எம்.டி.சி. பாலிமெர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாரிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ''எண்ணங்களே மனிதர்கள் வாழ்வில் அடைய போகும் உயரத்தை தீர்மானிக்கும்'' என்ற கருத்தில் சிறப்புரையாற்றினார்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எம்.பி.ஏ. முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்காக புத்தக மதிப்பாய்வு, கட்டுரை விமர்சனம், வணிக வினாடி-வினா, வணிகத் திட்டம், சிறந்த மேலாளர், கழிவுகளில் இருந்து செல்வம், தீம் அடிப்படையிலான புகைப்படம், விளம்பர நகல் போட்டி, தினை உணவு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

முடிவில் உதவி பேராசிரியை செண்பகலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News