உள்ளூர் செய்திகள்

ஆய்வுக்கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெறும் பணிகள் ஆய்வு

Published On 2022-07-16 08:53 GMT   |   Update On 2022-07-16 08:53 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெறும் பணிகளை நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.
  • குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, திருப்பாற்கடலில் நடைபாதை அமைக்கும் பணி, உரக்கிடங்கில் மக்கும் குப்பைகள் உரமாக்கும் பணி, சக்கரை குளம் தெருவில் புதிதாக மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.

அப்போது நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, நிர்வாகப்பொறியாளர் சேர்மக்கனி, ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் தங்கபாண்டியன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்பு நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பணிகள் சம்பந்தமான ஆய்வுகளை ஆைணயர் மேற்கொண்டார். இதில் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News