காளீஸ்வரி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் 60 பேர் கலந்து கொண்டு சர்வதேச அளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை, போதி இன்டர்நேசனல் ஜெர்மன் ஆப் ரிசர்ஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சர்வதேச கருத்தரங்கம் "ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் புதிய வழிகள்" என்ற தலைப்பில் நடைபெற்றது.
இதில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சாந்தி வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்ந்துரை வழங்கினார். மலேசியா துல்தான் இத்ரிஸ் கல்வி பல்கலைக்கழக இணை பேராசிரியர் மகேந்திரன் மணிம் சிறப்புரையாற்றினார்.
இந்த அமர்வின் தலைவராக பூவம்மா இருந்தார். காவேரி கல்லூரி துணை முதல்வர் கோணி கோபால், மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் ஜான்சேகர் ஆகியோர் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் உள்ள புதிய யுக்திகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகளை பற்றி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் 60 பேர் கலந்து கொண்டு சர்வதேச அளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர். ஆங்கிலத்துறை பேராசிரியை ஸ்வப்னா, இலங்கை ஈஸ்டன் பல்கலைக்கழகம் மொழி மற்றும் ெதாடர்பியல்துறை ஆங்கில பேராசிரியர் ரோஹன் சவரிமுத்து ஆகியோர் பேசினர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.