- ராஜபாளையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை விழா ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர அ.தி.மு.க. சார்பில் நடந்தது. தெற்கு நகர செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட பேரவை துணைதலைவர் திருப்பதி, மேற்கு மாவட்ட மகளிரணி கவிதா, தெற்கு நகர அவைதலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
41-வது வார்டு பொன்னகரம் பகுதியில் அ.தி.மு.க. கொடியேற்றி ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் மின்சார பிரிவு மண்டல பொருளாளர் ரமேஷ்குமார், வார்டு செயலாளர் காசிராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜா, நகர துணை செயலாளர் சங்கர் ராஜ், வார்டு பொருளாளர் கணேஷ் குமார், பெருமாள், சக்தி, கோபி, விக்னேஷ்,நடராஜன், இணைசெயலாளர் யோகேஷ் ,ராஜேந்திரன், முத்துக்குமார், பாலமுருகன், கோவிந்தராஜ், வார்டு பிரதிநிதி சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.