மோட்டார் சைக்கிள் திருட்டு; ராஜபாளையம் வாலிபர் கைது
- மோட்டார் சைக்கிள் திருட்டு; ராஜபாளையம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது தொடர்பாக கிருஷ்ணன் சாத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத் தன்று சாத்தூர் பை-பாஸ் ரோட்டில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மறித்து விசாரணை நடத்தினர்.
அவரிடம் வாகனத்துக்கு ரிய உரிய ஆவணங்கள் இல்லை. போலி பதிவு எண் வைத்து ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து கிடுக்கிப்பிடி விசா ரணை நடத்தினர்.
இதில் அவர் ராஜபாளை யம் அருகே உள்ள சுரைக் காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜோதிமுத்து என வும், இவர் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஜோதிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.