உள்ளூர் செய்திகள்
முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்திய தீயணைப்பு துறையினர்
- ஸ்ரீவில்லிபுத்தூரில் காற்றுடன் மழை பெய்தது.
- இதில் முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் ரோட்டில் உள்ள பட்டு வளர்ச்சி துறை அலுவலக நுழைவு வாயிலில் யூகலிப்டஸ் மரம் காற்று, மழைக்கு விழுந்தது. இதில் அலுவலக போர்டு மற்றும் மின்கம்பிகள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடையூறாக இருந்த மரம் மற்றும் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகில் ரோட்டில் விழுந்த கருவேல மரத்தை உபகரணங்கள் மூலம் அறுத்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். அந்த நேரத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணியை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் செய்தனர்.