உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மர்மச்சாவு

Published On 2022-08-25 06:24 GMT   |   Update On 2022-08-25 06:24 GMT
  • தொழிலாளி மர்மச்சாவு அடைந்தார்.
  • ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மார்க்கநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (75). பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கருப்பசாமி என்பவர் ஆதரவின்றி இவரிடம் வந்தார். தங்கவேல் அவருக்கு வேலை கொடுத்து வீட்டிலேயே தங்க அனுமதி அளித்தார்.

கருப்பசாமியை தேடி யாரும் வரவில்லை. இந்த நிலையில் நேற்று விஷேசத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கருப்பசாமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை தேடிச்சென்ற போது அங்குள்ள மெயின் ரோட்டில் காயங்களுடன் கருப்பசாமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே தங்கவேல் அவரை மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்றார். ஆனால் சிறிது நேரத்திலேயே கருப்பசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் மோதி கருப்பசாமி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News