உள்ளூர் செய்திகள் (District)

கைதான நாகராஜன்.

பண்ருட்டியில் சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி : போக்சோவில் கைதாகி சிறையில் அடைப்பு

Published On 2022-11-01 06:37 GMT   |   Update On 2022-11-01 06:37 GMT
  • 11 வயது சிறுமி வீட்டில் குளிக்கும் போது வீடியோ எடுத்ததை காட்டியுள்ளார்.
  • போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ்வழக்கு பதிந்து நாகராஜனை தேடி வந்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு பல்லவரா யநத்தம் முருகன் கோவில் தெரு வை சேர்ந்தவர் நாக ராஜ். (வயது24), கூலி தொழி லாளி திருமண மாகாதவர். இவர்கடந்த 15-ந் தேதி இதே பகுதியை சேர்ந்த நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி வீட்டில் குளிக்கும் போது வீடியோ எடுத்ததை காட்டியும், அவரை மிரட்டி பல முறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டுபுதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ்வழக்கு பதிந்து நாகராஜனை தேடி வந்தனர். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News