உள்ளூர் செய்திகள் (District)

சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்.

குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

Published On 2022-07-06 09:20 GMT   |   Update On 2022-07-06 09:20 GMT
  • குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது.
  • பள்ளி மாணவர்கள் எந்நேரத்திலும் குழியில் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சன்னதி தெருவிலிருந்து கல்லுளி திருவாசல் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் நாகூர், நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதும க்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருமரு கல் சன்னதி தெருவில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ள்ளது.

இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்ய குழிதோண்ட பட்டு சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது.இதனால் குழிக்கு அருகில் தனியார் மழலையர் பள்ளி மற்றும் அரசு மாணவியர் விடுதிக்கு செல்லும் மாணவர்கள் இந்நேரத்திலும் குழியில் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கல்லுளி திருவாசல் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து குழியினை மூட கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News