உள்ளூர் செய்திகள்
கடையநல்லூரில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்- தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்
- கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கொடியேற்றினார்.
- நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் மெகராஜ் நகர் , மேலக்கடையநல்லூர் பார்க், ரஹ்மானியாபுரம் 4-வது தெரு, கிருஷ்ணாபுரம் பஸ் நிலையம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அப்பாஸ் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் பெட்டி முருகையா, கவுன்சிலர்கள் முகையதீன்கனி, முருகன், வரவேற்றனர். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.