மோட்டார் சைக்கிள் மோதி இறந்த முதியவர் யார்?
சேலம்:
சேலம் சூரமங்கலம் மாமாங்கம் ஐடி பார்க் அருகில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார்சைக்கிள் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் முதியவர் பலத்த அடிபட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் மற்றும் போலீசார் சேர்ந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7-ந்தேதி இரவு 9 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த முதியவர் பெயர் மற்றும் முகவரி குறித்து எதுவும் தெரியவில்லை. அவர் கிரே கலர் கட்டம் போட்ட சட்டை, ஊதா கலர் வேட்டி அணிந்திருந்தார். இவரை பற்றி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.