உள்ளூர் செய்திகள்
விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்
- சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
- இதனால் ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்தி மூட்லு கிராம பகுதிகளில் சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
அத்திமூட்லு மற்றும் கல்லாகரம் அகரம் பகுதிகளில் மூன்று காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.
இது பற்றி ஊர் பொதுமக்கள் பாலக்கோடு வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் எந்த ஏற்பாடுகளும் செய்யாத நிலையில் ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.