உள்ளூர் செய்திகள்

நகராட்சி தலைவருடன் மார்க்கெட் வியாபாரிகள் சந்திப்பு

Published On 2022-06-07 09:52 GMT   |   Update On 2022-06-07 09:52 GMT
குமாரபாளையம் நகராட்சி தலைவருடன் மார்க்கெட் வியாபாரிகள் சந்தித்தனர்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் நடைபெற பூமி பூஜையும் போடப்பட்டது. பணிகள் துரிதமாக நடைபெற பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் விஜய்கண்ணன் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.

இந்நிலையில் குமாரபாளையம் தினசரி மார்க்கெட் சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வெங்கிடு என்கிற வெங்கடேசன், செயலர் விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனை நேரில் சந்தித்து, மார்க்கெட் பழைய இடத்திலிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டில் மாற்றி அமைத்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.

இதே போல் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் துரைசாமி, செயலர் தாமோதரன், பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும் விடுபட்ட பகுதியில் மின் இணைப்பு கொடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News