உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை
- லீனா குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லீனா தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாப்பேரி குமாரசாமி நாடார் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி லீனா (வயது 50). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். லீனா குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லீனா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.