உள்ளூர் செய்திகள் (District)

பாம்பு கடித்து பெண் சாவு

Published On 2023-07-29 09:56 GMT   |   Update On 2023-07-29 09:56 GMT
  • இரவில் வீட்டிற்கு வெளியே சென்ற போது விஷப்பாம்பு கடித்தது.
  • ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவோணம்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாண்டையார் இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து போனார். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது39). இவர் இரவில் வீட்டிற்கு வெளியே சென்ற போது விஷப்பாம்பு கடித்தது.

உடனே சிவரஞ்சனியை அவரது உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவரஞ்சனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்து 3 மாதங்களில் இளம் பெண் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News