உள்ளூர் செய்திகள் (District)

பாம்பு கடித்து பெண் பலி

Published On 2023-10-28 09:16 GMT   |   Update On 2023-10-28 09:16 GMT
  • நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார்.
  • சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கை நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் . இவரது மனைவி ஜெய ரஞ்சனி (வயது 31). இவர் நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அப்போது திடீரென கட்டு விரியன் பாம்பு கடித்தது.

இதில் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News