உள்ளூர் செய்திகள் (District)
- புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ச் போர்டில் பிளக்கை சொறுகினார்.
- சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராபுரம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்.
இவரது மனைவி உமாபதி (வயது 45).
இவர்கள் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த வீட்டில் மின்விசிறி போடுவதற்கு சுவிட்ஜ் அமைக்கப்பட்டது.
அப்போது புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ஸ் போர்டில் பிளக்கை சொறுகினார்.
இதில் மின்சாரம் தாக்கி உமாபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.