உள்ளூர் செய்திகள்
சாராயம் விற்ற பெண் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
- ராஜேந்திரன் மனைவி மலர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- கைது செய்யப்பட்ட மலர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்காகிளியனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ய சித்தாமூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்று வந்த திண்டிவனம் அரியன் குப்பம் கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர் (42) தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பழனி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கைது செய்யப்பட்ட மலர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.