உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

பெண்கள் கூடைப்பந்து போட்டி-எஸ்.ஆர்.பள்ளி மாணவிகளுக்கு முதல் பரிசு

Published On 2023-02-15 09:11 GMT   |   Update On 2023-02-15 09:11 GMT
  • குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பெண்கள் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
  • எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவிகள் முதல் பாிசை பெற்றனா்.

சுரண்டை:

மாவட்ட அளவிலான முதல்-அமைச்சா் கோப்பை பெண்கள் கூடைப்பந்து போட்டியானது குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் குற்றாலம் செய்யது பள்ளி, இலஞ்சி பாரத் மாண்டிசோாி, செங்கோட்டை எஸ்.ஆா்.எம். பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட சுமாா் 10 பள்ளிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதல் பாிசை பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல் வாய் மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாாிக்கனி, விளையாட்டு ஆசிாியா்கள் கோபால், மஞ்சுளா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News