மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த பயிற்சி முகாம்
- எவ்வாறு இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டது.
- முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை தாலுக்கா விற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ண ப்பிக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் தாசில்தார் மகேஷ் குமார் தலைமையில் முத்துப்பே ட்டையில் நடைபெற்றது.
வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, தனி தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் ஸ்ரீதர், தினேஷ் ஆகியோர் பயிற்சி அளித்து பேசினர்.
விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபடுவோர் எவ்வாறு இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் விண்ணப்பிக்க, ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் செயலி பதிவிறக்கம் செய்து செயல்முறை செய்து காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செயலி ஆப்பில் குடும்ப அட்டை எண், ஆதார்எண், தொலைபேசி, புகைப்படம் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் அனைத்தையும் கையாளுவது குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முத்துப்பே ட்டை வருவாய் அலுவலர் வினோத் குமார், பாலையூர் வருவாய் அலுவலர் சுதா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.