உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் டி.எஸ்.பி ராஜா ரணவீரனுக்கு பாராட்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

பணி மாறுதல் செல்லும் பரமத்திவேலூர் டி.எஸ்.பி.க்கு பாராட்டு விழா

Published On 2022-08-02 09:37 GMT   |   Update On 2022-08-02 09:37 GMT
  • பரமத்திவேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக சேலம் பகுதியை சேர்ந்த ராஜா ரணவீரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.
  • இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு டி.எஸ்.பி ராஜா ரணவீரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக சேலம் பகுதியை சேர்ந்த ராஜா ரணவீரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.

அதேபோல் அனைத்து அரசியல் கட்சியினரையும், பொதுமக்களையும், வணிக நிறுவனங்களை சேர்ந்த வியாபாரிகளையும் ஒரே போல் அரவணைத்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் டி.எஸ்.பி ராஜா ரணவீரன் பணி மாறுதல் செய்யப்பட்டார்.பணி மாறுதல் காரணமாக செல்லும் அவருக்கு பாராட்டு மற்றும் வழி அனுப்பு விழா நடை பெற்றது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு டி.எஸ்.பி ராஜா ரணவீரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News