உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே போலீசாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது -மது பாட்டில்கள் பறிமுதல்

Published On 2022-10-25 08:15 GMT   |   Update On 2022-10-25 08:15 GMT
  • செந்தில்குமார் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
  • போலீசார் சாதுர்யமாக செந்தில்குமாரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

களக்காடு:

களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிங்கிகுளம், நவீன் நகரை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (வயது 43) என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

இருப்பினும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு செந்தில்குமாரை பிடித்து, களக்காடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்குமாரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 42 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News