உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் தொழிலாளி உடல் கருகி பலி

Published On 2023-04-26 09:20 GMT   |   Update On 2023-04-26 09:20 GMT
  • பீடி பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பை பற்ற வைத்தார்.
  • துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை தொட்டிப்பாளையம் பிரிவு அருகே உள்ள டேனியல் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 67). கூலித் தொழிலாளி.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார். சம்பவத்தன்று வெங்கடாசலம் பீடி பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பை பற்ற வைத்தார்.

அப்போது நெருப்பு படுக்கையில் விழுந்து தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. அப்போது தீ படுக்கையில் இருந்த வெங்கடாசலம் மீதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வெங்கடாசலத்தை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் வெங்கடாசலம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News