உள்ளூர் செய்திகள்

ஏற்காடு அருவில் தவறி விழுந்து திருப்பூர் என்ஜினீயர் பலி

Published On 2022-08-16 09:58 GMT   |   Update On 2022-08-16 09:58 GMT
  • ஏற்காட்டில் இருந்து 21 கி.மீ.தொலைவில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.
  • அப்போது சக்திவேல் அருவியின் மேற்பகுதியில் பாறையில் ஏறினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அருவில் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சக்திவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ஏற்காடு:

திருப்பூர் பூண்டி பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது53). என் ஜினீயரான இவர் தனது குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு சுற்ருலா வந்தார். ஏற்காட்டில் அறை எடுத்து தங்கி முக்கிய இடங்களை பார்த்த அவர்கள் இன்று காலை ஏற்காட்டில் இருந்து 21 கி.மீ.தொலைவில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

அங்கு சக்திவேலின் குடும்பத்தினர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சக்திவேல் அருவியின் மேற்பகுதியில் பாறையில் ஏறினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அருவில் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சக்திவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். சக்திவேலுக்கு காந்திமதி(50) என்ற மனைவியும், ஆதித்யா(25), அபிமன்யு(18) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

Tags:    

Similar News