உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே வாலிபர் மர்மச்சாவு-உறவினர்கள் மீது வழக்கு

Published On 2022-08-01 09:01 GMT   |   Update On 2022-08-01 09:01 GMT
  • சிவா வீட்டின் சமையல் அறையில் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
  • பொட்டல் புதூர் கிராம நிர்வாக அலுவலர் , சிவா சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

நெல்லை:

கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் புத்தன் தெருவை சேர்ந்தவர் சிவா(வயது 25). இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவா வீட்டின் சமையல் அறையில் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனை கண்ட அவரது மனைவி மற்றும் பெற்றோர் தங்களது உறவினர்களை அழைத்து இரவோடு இரவாக சிவாவின் உடலை எரித்தனர்.

இதுகுறித்து பொட்டல் புதூர் கிராம நிர்வாக அலுவலர் சுடர்செல்வன், சிவா சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். யாருக்கும் தெரியாமல் உடலை எரித்ததாக கூறி அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News