உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

வேடசந்தூர் அருகே வேன்மோதி வாலிபர் பலி

Published On 2022-08-17 03:57 GMT   |   Update On 2022-08-17 03:57 GMT
  • பைக் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே அகரம் சத்திரபட்டி இந்திராநகரை சேர்ந்தவர் வீரமணி(39). இவர் 4 வழிச்சாைலயில் கிரியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற டிராவல்ஸ் வேன் பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வீரமணி சம்பவ இடத்திேலயே பலியானார். தகவல் அறிந்ததும் ஏட்டு பார்த்தசாரதி அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News