கோவையில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறித்த இளம்பெண் கைது
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி 13 பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
- மூதாட்டிகள் இதுகுறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.
கோவை
கோவை மாவட்டம் கோட்டூரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது.
இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்த பழனாத்தாள் (வயது 75), அதே பகுதியை சேர்ந்த சிவபாக்கியம் (65), துளசியம்மாள் (75) ஆகிய மூதாட்டிகளிடம் 13 பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர். செயினை பறிகொடுத்த மூதாட்டிகள் இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதி வான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம் பெண் ஒருவர் வயதான மூதாட்டிகளை குறி வைத்து செயினை பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த கவுதமி (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 13 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கவுத மியை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்த னர்.