உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-02-05 09:06 GMT   |   Update On 2023-02-05 09:06 GMT
  • ஆறுமுகம் இசைராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
  • தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி:

நெல்லை-திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் அரியபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இசைராஜ்(வயது 27).

தற்கொலை

இவர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை யில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு அவர் பணிபுரியும் நிறுவனத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டைக்கு அவரது உறவினர்கள் விரைந்து சென்றனர்.

அப்போது அவர்கள் ஆறுமுகம் இசைராஜை சிலர் தற்கொலைக்கு தூண்டி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக புதுக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ், வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News