உள்ளூர் செய்திகள்

குரும்பூர் அருகே வாலிபர் கொலை-மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் குத்திக்கொன்றோம்- கைதான 2 பேர் வாக்குமூலம்

Published On 2022-09-02 09:15 GMT   |   Update On 2022-09-02 09:15 GMT
  • விக்னேசை அவரது நண்பர்கள் கொலை செய்தது தெரியவந்தது.
  • மதுபாட்டில், கத்தியால் விக்னேசை குத்தினோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குரும்பூர்:

தூத்துக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது28). இவர் குரும்பூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 28-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர்கள் விக்னேசை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தூத்துக்குடி பூபாலராயபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (28), ராமலட்சுமணன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசில் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

கடந்த 28-ந்தேதி நாங்களும், விக்னேசும் சேர்ந்து ஆமுகநேரியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி மதுக்குடித்தோம். பின்னர் மோட்டார் சைக்கிளில் குரும்பூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதிக்கு சென்றோம்.

அங்கு வைத்து 3 பேரும் மீண்டும் மதுக்குடித்தோம். அப்போது எங்களுக்கும், விக்னேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் விக்னேசை மதுபாட்டில், கத்தியால் குத்தினோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த சிவா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News