உள்ளூர் செய்திகள்

ரெயிலில் மோதி இறந்த வாலிபர்.

பாவூர்சத்திரம் அருகே ரெயிலில் பயணித்த வாலிபர் சிக்னல் கம்பத்தில் மோதி பலி

Published On 2023-05-08 08:58 GMT   |   Update On 2023-05-08 08:58 GMT
  • நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயிலானது நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தது.
  • சிக்னல் கம்பத்தில் மோதிய வாலிபர் தூக்கி வீசப்பட்டு இறந்தது விசாரணையில் தெரியவந்தது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தென்காசி ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். இறந்த அந்த நபர் யார்? எவ்வாறு உயிரிழந்தார்? என்பது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டார்.

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வரும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயிலானது நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டில் நின்று பயணம் செய்த அந்த வாலிபர் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டின் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் நின்ற சிக்னல் கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு இறந்தது தெரியவந்தது.

உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாவூர்சத்திரம் அருகே ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த வாலிபர் சிக்னல் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் உயிரிழந்த வாலிபரின் முகவரி குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News