செய்திகள் (Tamil News)
கமல்ஹாசன் இன்று சென்னையில் பிரசாரம்
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் பிரசாரம் செய்தார். இன்று காலை பல்லாவரத்தில் அவர் பிரசாரத்தை தொடங்கினார். #LokSabhaElections2019 #KamalHaasan
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் பிரசாரம் செய்தார். இன்று காலை 8 மணிக்கு பல்லாவரத்தில் அவர் பிரசாரத்தை தொடங்கினார்.
அதன்பிறகு அவர் தாம்பரம், படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
மதியம் 3 மணிக்கு தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் பிறகு பூந்தமல்லி பஸ் நிலையம், திருமங்கலம், நாதமுனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இரவு 7.30 மணிக்கு வில்லிவாக்கம் பஸ் நிலையம் பகுதியில் பேசும் அவர் தொடர்ந்து அயனாவரம் இணை அலுவலகம், புரசைவாக்கம் தாணா தெரு, சூளை தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 10 மணிக்கு யானை கவுனியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். #LokSabhaElections2019 #KamalHaasan
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் பிரசாரம் செய்தார். இன்று காலை 8 மணிக்கு பல்லாவரத்தில் அவர் பிரசாரத்தை தொடங்கினார்.
அதன்பிறகு அவர் தாம்பரம், படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
மதியம் 3 மணிக்கு தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் பிறகு பூந்தமல்லி பஸ் நிலையம், திருமங்கலம், நாதமுனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இரவு 7.30 மணிக்கு வில்லிவாக்கம் பஸ் நிலையம் பகுதியில் பேசும் அவர் தொடர்ந்து அயனாவரம் இணை அலுவலகம், புரசைவாக்கம் தாணா தெரு, சூளை தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 10 மணிக்கு யானை கவுனியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். #LokSabhaElections2019 #KamalHaasan