இந்தியா

வேலை இழக்கும் அபாயம்... 20 நாளில் தற்கொலை ஹெல்ப்லைனை தொடர்பு கொண்ட 1500 வைர தொழிலாளர்கள்

Published On 2024-08-12 12:28 GMT   |   Update On 2024-08-12 12:28 GMT
  • வைர தொழிலின் மந்த நிலையால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • தினமும் 75 தொழிலாளர்கள் தற்கொலை எண்ணம் தொடர்பாக ஹெல்ப்லைனுக்கு கால் செய்துள்ளனர்.

வைர உற்பத்தி குஜராத்தின் முக்கியமான தொழிலாளாகும். இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட விரக்தியால் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகியுள்ளது. ஆகவே தொழிலாளர்களை காக்கும் பொருட்டு குஜராத்தில் உள்ள வரை வைர தொழிலாளர் சங்கத்தால் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டது.

இந்த தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவைக்கு கடந்த 20 நாட்களில் 1500 தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர். தினமும் 75 தொழிலாளர்கள் தற்கொலை எண்ணம் தொடர்பாக இந்த ஹெல்ப்லைனுக்கு கால் செய்துள்ளனர்.

மேலும் கஷ்டப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வைர தொழிலாள சங்கம் உதவி செய்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 20 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய், சக்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொழிலாளர் சங்கம் வழங்கியுள்ளது.

வைர வியாபாரி லால்ஜி படேல், கஷ்டப்படும் 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

Tags:    

Similar News