செய்திகள் (Tamil News)

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 பெண் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

Published On 2016-09-28 13:05 GMT   |   Update On 2016-09-28 13:05 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பெண் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தை சேர்ந்த படே சட்டி கிராமத்தினருகே மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து இன்று மதியம் பாதுகாப்பு படையினருடன் இணைந்து அருகில் உள்ள காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

திடீரென காடுகளில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் மாவோயிஸ்ட்டுகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். துப்பாக்கி சூட்டிற்கு பயந்து மாவோயிஸ்ட்டுகள் தப்பியோடினர்.

மாவோயிஸ்ட்டுகள் தப்பியோடியதைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் 3 பெண் மாவோயிஸ்ட்டுகளின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறந்து கிடந்தவர்களின் உடல்களுக்கு அருகே பைப் வெடிகுண்டுகள், நாட்டு துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News