செய்திகள்

தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் - மத்திய மந்திரி சதானந்த கவுடா

Published On 2018-05-15 05:01 GMT   |   Update On 2018-05-15 05:01 GMT
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறியுள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
பெங்களூரு:

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், பா.ஜ.க கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்நிலையில் மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலக்கத்துறை மந்திரி சதானந்த கவுடா தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார்.

கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை, ஆட்சி அமைக்க 112 தொகுதிகள் போதுமானதாகும். ஆனால், 112 தொகுதிக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை பெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். 
#KarnatakaVerdict #KarnatakaElectionResults     
Tags:    

Similar News