செய்திகள் (Tamil News)
கேரளாவில் நிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
நிபா காய்ச்சால் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நேற்று உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. #NipahVirus #Kerala
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிபா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரசின் (25) என்பவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை முடிவுகள் வந்தது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் அவர் நிபா வைராசால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனால் நிபா காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NipahVirus #Kerala